Namaskaram - salutations

Namaskaram - salutations I dedicate my blog to the enormous art lovers across the globe I love knitting so much that I have started a blog for knitting.Knitting is a job that I will like to go on.Through knitting I breathe life into many people's life. It is knitting time. When I want to relax I do it with knitting. I am a knitting buff.I love to do knitting on various topics. There is no way that you can stop me doing knitting.I am born with a flare for knitting.My face brightens once I touch the knitting needs.The electronic media has helped knitting to travel across the world.Every stitch made will talk about how knitting has influenced people.I have done some and would like to share it with you. Some patterns have been taken from free knitting sites. Some designs have been created by me. Many a times I have modified the patterns to suite my requirements. Finally I can say that I breathe knitting, I talk knitting, I walk knitting - a total knitaholic

Thank You

Thanks for visiting my blog. Your appreciations are most welcome

My sweet buddies

Showing posts with label sidar. Show all posts
Showing posts with label sidar. Show all posts

Tuesday, December 17, 2019

Ammany ammal - penn sidar




திருவண்ணாமலை மாவட்டம் சென்னசமுத்திரத்தில் அந்தத் தெருவின் வழியாகப் 
போகிறவர்கள், அந்த வீட்டை வியக்காமல் போக முடியாது.
திருவண்ணாமலை மாவட்டம் சென்னசமுத்திரத்தில் அந்தத் தெருவின் வழியாகப் 
போகிறவர்கள், அந்த வீட்டை வியக்காமல் போக முடியாது.

பார்ப்பதற்கு சாதாரண விவசாயக் குடும்பம் வசிக்கும் வீடு போல் தென்பட்டாலும், 
உள்ளிருந்து வரும் ‘கமகம’ ஊதுவத்தி மணமும், கதம்பமும், சாம்பிராணி கலந்து கட்டி 
வரும் வாசமும், இதையெல்லாம் விட “ஓம் நமச்சிவாய” என்று அழகிய இளங்குரலில் 
வரும் மந்திரமும், அதை ஒரு சிவாச்சாரியார் வீடோ என்றே ஐயம் கொள்ள வைக்கும்.

“அருள்மொழி.. அருள்மொழி”
பதிலில்லை.. போய்ப் பார்த்தார் ஆயி அம்மாள்.
கண்மூடி தியானத்தில் அமர்ந்திருந்தாள், அருள்மொழி.

ஆச்சரியமாக இருந்தது ஆயி அம்மாளுக்கு.. “எங்கிருந்து வந்தது இந்தப் பெண்ணிற்கு 
இவ்வளவு பக்தி. இவள் வயது பெண்களெல்லாம், தோழிப் பெண்களோடு விளையாடிக் 
கொண்டும், காட்டில் வேலை செய்து கொண்டும் இருக்கிறார்கள். இவள் மட்டும்தான்
 ‘சிவமே கதி’ என்றிருக்கிறாளே” என்று குழப்பத்துடனே நின்றிருந்தார்.

அரைமணிநேரம் கழித்து தீபாரதனை செய்து விட்டு சாப்பிட வந்தாள் அருள்மொழி.

சாப்பிடும் முன்பும் கூட, தியானம் செய்து விட்டு சாப்பிடும் பெண்ணைப் பார்த்து பயந்தே 
போனாள், ஆயி அம்மாள்.

கணவர் கோபால் பிள்ளை வீடு வந்தவுடன், “எதாவது செய்யுங்க. சாமி கும்பிட வேண்டியதுதான். அதுக்காக இப்படியா? எந்நேரமும் பூஜையறையே கதின்னு கிடக்கிறா” என்று ஆதங்கப்பட்டார் ஆயி அம்மாள்.

மனைவியின் புலம்பலைக் கேட்ட கோபால், “சரி ஆயி.. உன்னோட சித்தப்பா பையனுக்கோ, 
இல்லை எங்க அக்கா பையனுக்கோ வர்ற தை மாசம் பரிசம் போட்டுரலாம். இரண்டு பேருமே
 நல்லவங்க. கல்யாணம் ஆனா எல்லாம் சரியாப் போயிரும்” என்றார்.

வாசலில் தொங்கிய மாவிலைத் தோரணமும், சமையலறையில் காலையிலேயே வீசிய 
பலகார வாசனையுமாக, அன்று வீடே களை கட்டி இருந்தது.

“என்னம்மா விசேஷம்?” என்றாள் அருள்மொழி.

“இன்னைக்கு என்னோட சித்தப்பா வீட்டில் இருந்து உன்னை பெண் கேட்டு பரிசம் போட 
வரப் போகிறார்கள். உன்னிடம் சொல்லலாம்னு பார்த்தா நீ கண்ணைத் தொறந்தாத்தானே?”

துடித்துப் போனாள் அருள்மொழி.

‘என்ன செய்வது?’ என்று தெரியாமல் திகைத்தாள் அருள்மொழி. ‘பரிசம் போட்டுவிட்டால், 
கையைக் காலைக் கட்டியாவது கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள்’ என்று 
பயம்கொண்டாள்.

மனதில் இருந்த துயரம், கால்களைக் கட்டிப் போடவில்லை. விறுவிறுவென்று 
வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

“சிவாயநம.. சிவாயநம” என்று ஜெபித்தபடி நடந்தவர், தன்னுணர்வு பெற்றுப் பார்த்த 
போது கோமுட்டிக்குளம் என்ற நீர்த் தடாகத்தின் முன் நிற்பதைக் கண்டார்.

“அருணை ஈஸ்வரா.. உன் கருணையே.. கருணை..” என்றபடி, அந்தக் குளத்தில்
 குதித்து விட்டாள், அருள்மொழி.

குளத்தைச் சுற்றி இருந்த வயல்வெளியில் வேலைசெய்து கொண்டிருந்தவர்கள், 
அவள் விழுந்ததைப் பார்த்து ஓடிவந்தனர். குளத்தில் குதித்துத் தேடிப் பார்த்தனர். 
எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை.

ஆயி அம்மைக்கும், கோபாலனுக்கும் அழுதழுது கண்ணீர் வற்றி விட்டது. எல்லோரும் 
எவ்வளவோ சொல்லியும் குளக் கரையை விட்டு நகர மாட்டேன் என்று அங்கேயே தவம் 
இருந்தார்கள். குளத்தில் எதாவது சின்னச் சலனமாவது தெரி கிறதா? என்று பார்த்துக் 
கொண்டே இருந்தார்கள். ஆனால் குளம் மவுனமாகவே இருந்தது.

மூன்றாவது நாள் குளம் திடீரென சல சலத்தது. தாயும், தந்தையும் உயிரைக் கையில் 
பிடித்துக் கொண்டு பார்த்தார்கள். அங்கே அன்று மலர்ந்த மலர்போல் உயிருடன் வந்தாள், 
அருள்மொழி.

விஷயம் கேள்விப்பட்டு கூடிய கூட்டத்தினருக்கு, அருள்மொழி அங்கிருந்த குளக்கரை 
மண்ணை எடுத்து கொடுக்க, அது அருணாசலேஸ்வரர் அவல், பொரி பிரசாதமாக மாறியது.

தனக்கு சிவபெருமானே குருவாக இருந்து யோக நிலையைக் கற்றுத் தந்ததாகவும், தான் 
ஒரு பெண் சித்தராக மாறி விட்டதாகவும் கூறிய அருள்மொழி, தன் பெயர் ‘அம்மணி அம்மாள்’
 என்றும் சொன்னார்.

அப்போதே திருவண்ணாமலைக்கு பயணப்பட்டார். கண் நிறைய அண்ணாமலையானை 
தரிசித்து “பக்தர் களுக்கு தொண்டு செய்வதே மகேசனைத் திருப்திப்படுத்தும்” என்று 
அன்றிலிருந்து அருணைக்கு வரும் பக்தர்களுக்கும், கிரிவலம் செய்பவர்களுக்கும்
 தொண்டாற்றத் தொடங்கினார். ஆனால் ஈசன் எதற்காக அவரைத் தேர்ந்தெடுத்தானோ, 
அந்தப் பணி முடிவடையாமலேயே இருந்தது.

திருவண்ணாமலைக் கோவிலில் அனைத்து கோபுரங்களும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், 
வடக்கு கோபுரம் மட்டும் எப்போது கட்ட ஆரம்பித்தாலும் ஏதோ ஒரு தடங்கல் வந்து கட்டி
 முடிக்க முடியாமல் மொட்டை கோபுரமாகவே நின்றது.

ஒருநாள் இரவு அம்மணி அம்மாள் கனவில் வந்த ஈசன், “வடக்கு கோபுரத்தைக் கட்டுவதே 
உன் பணி” என்று சொல்லி மறைந்தார்.

அன்றில் இருந்து உயிர் மூச்சாக அந்தப் பணியைத் தொடங்கினார்.

அவர் ஆற்றலை அறிந்த வணிகர்கள், பண உதவி செய்தனர். ஒரே ஒருவர் மட்டும் 
பணத்தை வைத்துக் கொண்டே இல்லை என்று கூறிவிட்டார்.

அப்போது அம்மணி அம்மாள், அவரது சட்டைப் பையில் இருந்த பணத்தின் அளவை 
சரியாகச் சொல்ல, வீட்டுக்குச் சென்றதும் எண்ணிப்பார்த்த வணிகருக்கு பெரிய அதிர்ச்சி. 
அம்மணி அம்மாள் கூறிய தொகை, ஒரு ரூபாய் கூட அதிகமாகவோ குறைவாகவோ 
இல்லாமல், மிகச்சரியாக இருந்தது. அந்தச் செல்வந்தர், உடனடியாக மனம் மாறி, 
இருமடங்கு பொருளுதவி செய்தார்.

இவ்வாறு பலரும் பொருளுதவி செய்ய, கோபுரம் ஒவ்வொரு நிலையாகக் கட்டி 
முடிக்கப்பட்டு, ஐந்து நிலைகள் வரை வந்துவிட்டது.

எல்லாப் பணமும் தீர்ந்து விட்டாலும், இனி யாரைக் கேட்பது என்று சோர்வடையாமல், 
மைசூர் மகாராஜாவிடம் சென்றார், அம்மணி அம்மாள்.

இவரின் எளிய தோற்றம் கண்டு, தடுத்து நிறுத்திய காவலன் “யார் நீ?” என்றான்.

“மகாராஜாவிடம் உதவி கேட்டு வந்திருக்கிறேன் அப்பா”

“பார்க்கலாம்.. அப்படிப் போய் உட்காரு..”

சொன்னபடியே ஓரமாகப் போய் உட்கார்ந்து விட்டார் அம்மணி அம்மாள்.

ஆனால் தனது லகிமா சக்தியால், அரண்மனைக்குள் தர்பார் மண்டபத்திற்குள் நுழைந்து, 
மகாராஜா முன்னால் போய் நின்றார்.

உரிய அனுமதி இல்லாமல் தன் முன் வந்து நின்ற பெண்ணைப் பார்த்த அரசர் ஆச்சரியம்
 அடைந்து, “யார் நீங்கள்?” என்றார்.

“என் பெயர் அம்மணி. திருவண்ணாமலை வடக்கு கோபுரம் கட்ட பொருளுதவி கேட்டு வந்தேன். 
காவல்காரன் உள்ளே விட மறுத்ததால், லகிமா சக்தியைப் பயன்படுத்தி உள்ளே வந்தேன்.”

“என்ன இது.. என்னால் நம்ப முடியவில்லையே?. யாரங்கே காவல்காரனை அழைத்து வா”

மன்னனின் கட்டளைப்படி அரண்மனைக் காவலன் உள்ளே வரவழைக்கப்பட்டாள். அவன் 
தான் வெளியே நிறுத்தி வைத்த பெண்மணி, உள்ளே இருப்பதைக் கண்டு ஆச்சரியம் 
கொண்டான். “நீ எப்போது உள்ளே வந்தாய்.. வெளியே அல்லவா அமர்ந்திருந்தாய்?”

மகாராஜா குழம்பிப் போய் அம்மணி அம்மாளையும் உடன் அழைத்துக் கொண்டு வெளியே 
போய்ப் பார்க்க, அங்கே அம்மணி அம்மாள் அமர்ந்து இருந்தார்.

அவரது சக்தியைக் கண்டு வியந்து, அவருக்கு உரிய மரியாதைகள் செய்து பட்டுப்புடவை 
பரிசளித்து குதிரைகளில் பொன்னும் பொருளும் அனுப்பி வைத்தார்.

அதைக்கொண்டு ஆறு மற்றும் ஏழாம் நிலைகளைக் கட்டி முடித்தார். மீண்டும் பொருள் 
தீர்ந்து விடவே, “நீயே கதி.. நீயே சரணம் நமசிவாய” என்று தவத்தில் ஆழ்ந்து விட்டார்.

தவத்தில் காட்சி அளித்த இறைவன், “பொருள் தேவைப்படும் இடங்களில் எல்லாம், 
வேண்டிய அளவு திருநீற்றைக் கொடு. அது பொன்னாக, கூலிப்பணமாக மாறி விடும்” என்றார்.

அம்மணி அம்மாளும் அதன்படியே செய்ய பதினொரு நிலைகள் கட்டி முடிக்கப்பட்டன.

இவரது இறை ஆற்றலையும், விடாமுயற்சியும் கண்டு அப்போதைய ஆங்கிலேய அரசு 
வாய் பிளந்தது.

மேற்கு மற்றும் தெற்கு கோபுரங்களை விட உயரமாகவும், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்திற்கு
 இணையாகவும் இருந்த கோபுரம் பதிமூன்று கலசங்களைக் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது.

கோபுரத்தைக் கட்டி முடித்து, ஈசன் அருளால் தானே முன்னின்று கோபுர கும்பாபிஷேகத்தையும் 
செய்து வைத்தார், அம்மணி அம்மாள்.

அவர் கட்டியமைத்த கோபுரம், இன்றளவும் ‘அம்மணி அம்மாள் கோபுரம்’ என்றே 
அழைக்கப்படுகிறது.

தன் யோக சக்தியால் திருநீற்றின் மூலம், பல்லாயிரக்கணக்கானவர்களின் நோய் தீர்த்த 
அம்மணி அம்மாள், தனது ஐம்பதாவது வயதில் தைப்பூச தினத்தன்று ஈசனோடு கலந்தார்.

இவரது ஜீவ சமாதி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், எட்டாவது லிங்கமான 
ஈசான்ய லிங்கத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.

1735-ம் ஆண்டு மார்கழித் திங்கள் ஆயி அம்மாள் - கோபால் பிள்ளை தம்பதிக்கு மார்கழி 
மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் அம்மணி அம்மாள். அவர் சிவனையே 
குருவாகக் கொண்டு ஐம்பது ஆண்டுகள் இறை தொண்டு செய்து, 1875-ம் ஆண்டு 
சிவலோகப் பதவி அடைந்தார்.

அவர் ஈசனோடு கலந்து 150 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்றும் இவரின் 
சமாதியில் கொடுக்கப்படும் விபூதிப் பிரசாதம் நோய்களை தீர்க்கிறது.

இன்றும் கிரிவலம் வரும் பக்தர்கள் அம்மணி அம்மாளை தியானம் செய்து நம்பிக்கையோடு 
தனது குறைகளைச் சொல்லிச் செல்கின்றனர். அவர்களின் வேண்டுதலை அம்மணி 
அம்மாள் அரூபமாக நின்று கேட்டு வழிநடத்துவதாகவும் நம்பப்படுகிறது. அவரது 
சன்னிதியில் தியானம் செய்தாலே, மனம் அமைதி பெறுவதை உணர முடியும்.

பெண்களுக்கு ஆன்மிக சுதந்திரம் இல்லாத காலகட்டத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 
ஒரு பெண் தன்னந்தனியாக ஒரு கோபுரத்தையே கட்டி முடித்திருக்கிறார் என்பது 
சாதாரணக் காரியமல்ல..

இறையருளும், விடாமுயற்சியும், வைராக்கியமும் தன்னம்பிக்கையும் கொண்ட அம்மணி 
அம்மாளின் நினைவாக இன்றும் போற்றப்படும் திருவண்ணாமலை வடக்கு கோபுரத்தையும், 
அவரின் ஜீவசமாதியையும் எப்போது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் 
கோவிலுக்குச் சென்றாலும் தரிசித்து விட்டு வருவோம்.
source- dina thanti


yogi giribala- penn sidar



yogi giribala- penn sidar
வங்காளத்தில் ஒரு நடுத்தரமான கிராமத்து வீடு. அதனுள் இருந்து வெளியே வந்தார் ஒரு தாய். கையை கண்ணுக்கு மேல் வைத்து வானத்தை நோக்கினார்.
பதிவு: நவம்பர் 21, 2019 21:21 PM
சூரியன் உச்சியில் சுட்டெரித்துக் கொண்டு இருந்தான்.
“ஐயோ.. உச்சிப் பொழுதாகி விட்டதே. வந்து விடுவாளே! சமைத்ததில் ஒரு பாகத்தை மட்டும் சட்டியில் மூடி வைத்து விட்டு, மீதி சாப்பாட்டை மறைத்து வைத்தார்.
மறைக்கும் போதே மனதில் வேதனை தோன்றாமல் இல்லை. தன் பிள்ளைதான் சாப்பிடுகிறது என்றாலும், வறுமை தாண்டவமாடும் வீட்டில், மற்ற குடும்ப உறுப்பினர்களையும் அந்த தாய் கவனித்தாக வேண்டுமே.. ‘எல்லோரையும் போலதானே இந்தப் பெண்ணும் பிறந்தாள். இவளுக்கு மட்டும் எப்படி இரண்டு வயிறு போல எப்போதும் “பசி.. பசி..” என்று பறக்கிறாள். எவ்வளவு செய்து வைத்தாலும் எதையும் மிச்சம் வைக்காமல் தின்று விடுகிறாள். நாளைக்கு பிறர் வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டுப் போகும் பெண்.’ மனம் வெதும்பி பெருமூச்சு விட்டார் அந்த தாய்.
அப்போது வீட்டிற்கு வெளியே “அம்மா..” என்ற குரலும்., அதைத் தொடர்ந்து “பசிக்கிறது.. சாப்பாடு ஆகி விட்டதா?” என்ற குரலும் கேட்டது.
வந்தது அந்த தாயின் மகள்தான். அவள் பெயர் பாலா.
மகளின் குரலைக் கேட்டதும், “எல்லாம் ஆகி விட்டது. வந்து சாப்பிடு. அதென்ன கொஞ்சம் கூட பொறுக்க முடியாத பசி? நாளைக்கு கல்யாணம் ஆகி புகுந்த வீடு போனால் எப்படி கேலி செய்து சிரிக்கப் போகிறார்களோ!” என்றார்.
“போம்மா.. அதெல்லாம் அப்போது பார்த்துக்கலாம். முதல்ல நீ சாப்பாட்டப் போட்டு சாம்பார ஊற்று” என்று விளையாட்டாகவே பதில் சொன்ன பாலாவைப் பார்த்து, மீண்டும் பெருமூச்சு விடத்தான் முடிந்தது, அவளது அம்மாவால்.
அடுத்த வருடமே பாலாவிற்கு திருமணம் செய்து வைத்தனர். எல்லா இடங்களிலும் இருக்கும் மாமியார் - மருமகள் சண்டை அங்கேயும் நடந்தது.
பாலாவின் பெரும் உணவுப் பழக்கத்தை அசிங்கமாக கிண்டல் செய்தார் மாமியார்.
அவரின் கேலி பொறுக்க முடியாமல் இனிமேல், “உணவையும், நீரையும் தொடேன்” என்று சபதம் செய்தாள், பாலா.
அதற்கும் அவரது மாமியார், “உன்னால் சாப்பிடாமல் இருக்க முடியுமா? என்று கிண்டல் செய்யவே வீட்டை விட்டு வெளியேறினார்.
அவரின் புகுந்த வீட்டுக்கு காசியில் பரம்பரை பரம்பரையாக ஒரு குருவின் ஆசிரமத்துடன் தொடர்பு இருந்திருக்கிறது. பாலாவின் பயணத்தையும் இறைவன் அதை நோக்கியே அமைத்திருந்தார்.
காசியில் கங்கை ஆற்றில் இறங்கிக் குளித்து விட்டு மேலேறி வந்த பாலாவின் முன்பு, அந்த குரு நின்று கொண்டிருந்தார்.
“அன்புள்ள சிறிய அன்பே! உங்கள் வேண்டுதலை நிறைவேற்ற கடவுளால் அனுப்பப்பட்ட குரு நான்.
இன்றைய தினத்தில் இருந்து நீங்கள் நிழலிடப்பட்ட வெளிச்சத்தில் வாழ்கிறீர்கள்” என்று ஆசீர்வாதம் செய்தார்.
அதன்பிறகு, அந்த குருவே பாலாவிற்கு, கிரியா யோகாவையும் கற்றுக்கொடுத்தார். ‘கிரியா யோகா’ என்பது, சுவாசப் பயிற்சி மற்றும் மந்திரம் மூலமாக சாப்பாடு இல்லாமல் உயிர் வாழும் முறை.
அங்கே தான் சாதாரண பாலா ‘கிரிபாலா’வாக ஆனார்.
அன்றில் இருந்து அன்னைக்கு இரவும், பகலும் ஒன்றானது. இரவு முழுவதும் தியானத்தில் இருந்தாலும், பகலில் எப்போதும் போல வெளி வேலைகளைச் செய்வார். இப்படி ஒரு பெண் உணவும், நீரும் இல்லாமல் உயிர் வாழ்கிறார் என்ற தகவல் அந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னனுக்கு தெரிவிக்கப்பட்டது. (மாகாணத் தலைவர் என்றும் சொல்கிறார்கள்)
அவர், கிரிபாலாவை அழைத்து வரச் செய்து, ஒரு தனி அறையில், இரவும்- பகலும் வைத்து கண்காணித்திருக்கிறார். சில நாள் கண்காணிப்பிற்குப் பிறகு, அவரது உன்னதமான சக்தியைக் கண்டு அவரை ‘லைட்’ என்று கூறி விடுவிக்கிறார்கள். அதாவது ‘லைட்’ என்பதற்கு, ‘ஈத்தர்’, ‘சூரியன்’ மற்றும் ‘காற்றில் இருந்து ஒரு குறிப்பிட்ட யோக உயிர் சக்தியைப் பெறுபவர்’ என்று பொருள்.
கிரிபாலா அம்மையாரே, தான் வாழ்ந்தது பற்றிய வாழ்க்கைக் குறிப்பை, தனது சொந்த வாக்குமூலமாகக் கொடுத்திருக்கிறார்.
தான் சிறுவயதில் உணவின் மீது மிகவும் விருப்பம் கொண்டவராக இருந்ததாகவும், தன் மாமியாரால் இந்தப் பழக்கம் மிகவும் கேலி செய்யப்பட்டதால் உணவையும், நீரையும் விட்டொழித்ததாகவும் கூறுகிறார். மேலும் தனது பன்னிரண்டு வயது நான்கு மாதங்களில் இருந்து தற்போதைய 68 வயது வரை, கிட்டத்தட்ட 56 ஆண்டுகள் சாப்பாடும் நீரும் எடுத்துக் கொண்டதில்லை. யார் கேட்டும் இந்த யோகா முறையை கற்றுக் கொடுத்ததில்லை” என்றும் அன்னை தன் வாய் மொழியாகவே கூறி உள்ளார்.
இன்னும் சிலர் அன்னை கிரிபாலா “கேசரி முத்திரை” மூலமாக உயிர் வாழ்ந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
கேசரி முத்திரை என்பது முறையாக குருவின் மூலமாக செய்யப்பட வேண்டும். அதாவது நாக்கை உள்பக்கமாக மடித்து, அண்ணாக்கு என்று சொல்லப்படும் மேல்நாக்கை தொட வேண்டும். நமது மண்டையில் இருந்து ஒரு திரவம் இந்த அண்ணாக்கு வழியாக இறங்கி சொட்டுச் சொட்டாக வந்து கொண்டே இருக்கும்.
இதை முறையாக ஒருவர் பயிற்சி செய்தால் பசி, தாகம், தூக்கம் போன்றவையே இருக்காது. இந்த யோகப் பயிற்சியின் மூலம் உயர்ந்த ஆன்மிக நிலையை அடையலாம். விஷம் போன்ற நஞ்சுப் பொருட்களால் மரணம் தாக்காது. இதையும் அன்னை பயிற்சி செய்து இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
‘எது எப்படியோ ஒரு பெண் வைராக்கியம் வைத்தால் நடவாத காரியம் இல்லை’ என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டி, உணவையும், நீரையும், விட்டொழித்து நூற்றி இருபது வருடங்கள் வரை யோக வாழ்க்கை வாழ்ந்த அன்னை கிரிபாலா என்றும் போற்றுதலுக்கு உரியவரே.
source - dina thanti

lallesvari - penn sidar



penn sidar - llaesvari
நம் பாரத நாட்டில் பண்டைய காலத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை மத வேறுபாடுகள்.
பதிவு: நவம்பர் 26, 2019 17:02 PM
நம் பாரத நாட்டில் பண்டைய காலத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை மத வேறுபாடுகள். இதைக் கையில் எடுத்துக்கொண்டு பல மனிதர்களும் மதம் பிடித்து அலைகிறார்கள்.
ஆனால் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண்மணி மத சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுத்திருக் கிறார். அதை வளர்க்கப் பாடுபட்டிருக்கிறார்.
யார் அந்த அம்மையார்?
1320-ம் வருடம் காஷ்மீரத்தில் பாண்டிர்தன் கிராமத்தில் பிறந்து,1392-ம் வருடம் வரை வாழ்ந்து மறைந்தவர், லல்லேஸ்வரி அன்னை. ‘லல்லா’, ‘லால் டெட்’ (grand mother), ‘லால் டிட்டி’ என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டவர் இவர். மிகவும் பழமையான காஷ்மீர் பண்டிட் குடும்பத்தில் பிறந்த இவரின் அறிவு, சிறுவயது முதலே சுடர் விட்டு எரிந்தது.
தன்னுடைய வீட்டிலேயே இருந்தபடி கல்வி பயின்றார். அவரது குருவாக இருந்து கல்வி பயிற்று வைத்தவர் சித் ஸ்ரீகாந்த் என்பவர். லல்லேஸ்வரியின் ஆன்மிக தாகத்தைப் புரிந்து கொண்டு, சைவ சம்பிரதாயங்களில் ஆர்வத்தைத் தூண்டியவர் இவர்தான்.
குருவின் மூலம் கற்ற அறிவைக் கொண்டு, அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே சிவபெருமான் மீது பல பாடல்களை எழுதி பாடத் தொடங்கினார். ஆனால் அவரது ஆன்மிகப் பணிக்கு, அந்த காலகட்டத்தில் பெண்பிள்ளைகள் அடிமைப்பட காரணமாக இருந்த குழந்தைத் திருமணம் மூலமாக முட்டுக்கட்டை உருவானது.
பெற்றவர்கள், தங்களின் பாரத்தை இறக்கும் நோக்கத்தில், லல்லேஸ்வரிக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இறைபணியில் மனம் மூழ்கி இருந்தாலும், பெற்றோர் மனம் வாடக் கூடாதே என்று மறுப்பு ஏதும் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் ஒரு பெண், ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு கொண்டு பாடல்கள் பாடுவதையும் எழுதுவதையும் லல்லேஸ்வரியின் கணவனும், மாமியாரும் ஏற்றுக்கொள்ள வில்லை. லல்லேஸ்வரியின் பெயர் பண்டிட் வழக்கப்படி `பத்மாவதி' என்று மாற்றப்பட்டது.
“பத்மா.. பத்மாக்கண்ணு.. வாடா வந்து சாப்பிடு” என்றார் மாமியார்.
அதிகாலையில் எழுந்தது முதல் வீட்டு வேலைகள் முழுவதையும் முடித்து விட்டு வந்தவரை, மாமியார் அன்போடு அழைத்ததும், அவரது வேலைக்களைப்பு முழுவதும் நீங்கி விட்ட உணர்வு ஏற்பட்டது. கவலைகள் அனைத்தும் மறந்து போக ஆவலுடன் சாப்பிடும் இடத்திற்குப் போனாள், அந்தக் குழந்தைத் தன்மை மாறாத குட்டி புதுமணப் பெண்.
சாப்பாட்டு தட்டு நிறைய சாதமும், அதன் மேல் பருப்பு சாம்பாரும் ஊற்றப்பட்டிருந்தது. ஆவலுடன் சாப்பாட்டைப் பிசைந்த அந்தப் பிஞ்சு மனம், கொஞ்சம் அதிர்ந்துதான் போனது. ஏனெனில் மேல்புறம் சாப்பாடு தூவப்பட்டு, அதன் கீழே கற்கள் வைக்கப்பட்டிருந்தன.
“அந்த சாப்பாட்டை எப்படி சாப்பிடுவது?”
மாமியார் முகத்தைப் பார்த்தார். அதுவரை அந்த முகத்தில் இருந்த காருண்யம் மறைந்து, குரூரம் குடி கொண்டிருந்தது. அதைப் பார்த்த பத்மாவதி என்றழைக்கப்பட்ட லல்லேஸ்வரியின் மனதில் சிவன் தோன்றினார். மனதிற்குள்ளேயே சிவபெருமானை போற்றித் துதித்தவர், எந்த வார்த்தையும் பேசாமல் அங்கிருந்து அகன்று சென்று விட்டார்.
மற்றுமொரு நாள் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பிக் கொண்டிருந்தார் பத்மாவதி.
அப்போது “அடியே பத்மா.. இவ்வளவு நேரமா தண்ணீர் கொண்டுவருவதற்கு? அங்கே யாரைப் பார்த்து நின்று கொண்டிருந்தாய்?” என்று கீழ்த்தரமாக பேசினார், அவரது மாமியார்.
அவளது கணவனும் கூட தன் தாயின் பேச்சை நம்பி, பத்மாவை பின் தொடர்ந்தான். ஒரு திருப்பத்தில் எதிர்பாராத விதமாக மனைவியின் மீதே மோதிக் கொண்டான்.
அதில் தண்ணீர் எடுத்து வந்த பானை கீழே விழுந்து துண்டு துண்டாக உடைந்தது. ஆனால் கீழே கிடந்த எல்லாத் துண்டுகளிலும் தண்ணீர் அப்படியே இருந்தது. அந்தத் துண்டுகளில் இருந்த தண்ணீரையே வீட்டின் பாத்திரங்களில் எல்லாம் ஊற்றினார். அந்த தண்ணீரே, அனைத்துப் பாத்திரத்திலும் நீர் நிரப்பும் அளவுக்கு வந்துகொண்டே இருந்தது. இன்னும் மீதம் தண்ணீர் இருந்தது.
“வேறு எந்தப் பாத்திரத்திலாவது ஊற்ற வேண்டுமா அத்தை?” என்று கேட்டாள், லல்லேஸ்வரி.
பன்னிரண்டு ஆண்டுகள் இதே போன்று பல வகைகளிலும் கொடுமைகளை அனுபவித்து வந்த லல்லேஸ்வரி, அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.
சிவனைத் தேடி, உண்மையைத் தேடி அலைந்தார். வழியில் அவருக்கு ஒரு குரு கிடைத்தார். யோகம் கை வந்தது. மீண்டும் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினார். ஆடைகள் கந்தலாகின. ஆனால் பல வருடங்களாக வாரப்படாமல் அடர்த்தியாக, கால் வரை வளர்ந்திருந்த கூந்தலே அவருக்கு ஆடையாக மாறிப்போனது.
எதைப்பற்றியும் அவர் கவலை கொள்ளவில்லை. உடலை மூடியிருந்த அந்த ரோமங்களோடு பார்க்கும் போது, அவர் பைராகி அல்லது பைரவி போன்ற தோற்றத்தில் காணப்பட்டார்.
அவரின் உரைகள், ‘வாக்குகள்’ என்று புகழப்பட்டன. இந்துக்கள் இவரை ‘லல்லீஸ்வரி’ என்றும், இஸ்லாமியர்கள் ‘லால் அரிபா’ என்றும் அழைத்தனர். பலருக்கும் இவர் ‘லால் அன்னை.’
“இந்த உலகின் ஒவ்வொரு துகளிலும் இறைவன் இருக்கிறான். இந்து - முஸ்லிம் என்ற பாகுபாடு எதுவும் இல்லை. முதலில் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். பிறகு இறைவனுடனான தொடர்பை அறிந்து கொள்ளுங்கள்” என்பது அவரது அறிவுரையாக இருந்தது.
இந்துக்களும், இஸ்லாமியர்களும் அவரைக் கொண்டாடினர். ஒவ்வொரு காஷ்மீரியும் அவர் புகழ்பாடினர். அவரைக் குறித்து பெருமைப் பட்டார்கள்.
தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை மத ஒற்றுமை, சகிப்புத்தன்மை, மனித நேயம் இவற்றை வலியுறுத்தி பல பாடல்களை எழுதிப் பாடினார் லால் அன்னை.
தனது வாழ்க்கையின் இறுதியில் தீ வளர்த்து அதில் இறங்கினார். அந்தப் பிறைசூடனின் தலையில் சூடிய மூன்றாம் பிறை போல், குளிர்ச்சியுடன் அவரை அணைத்தது நெருப்பின் நாக்குகள்.
நம் பாரத பூமிதான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறது. நாம் தாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறோம், இப்பூமியில் பிறக்க.
எத்தனையோ மகான்களும், யோகினிகளும் வாழ்வின் சுகங்களை அனுபவிக்காமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்து போயிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அன்னையரில் முதன்மையானவரான லல்லேஸ்வரி என்னும் லால் அன்னையின் பாதங்களை மானசீகமாக பணிவோம்.
source-dina thandi

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...