Namaskaram - salutations

Namaskaram - salutations I dedicate my blog to the enormous art lovers across the globe I love knitting so much that I have started a blog for knitting.Knitting is a job that I will like to go on.Through knitting I breathe life into many people's life. It is knitting time. When I want to relax I do it with knitting. I am a knitting buff.I love to do knitting on various topics. There is no way that you can stop me doing knitting.I am born with a flare for knitting.My face brightens once I touch the knitting needs.The electronic media has helped knitting to travel across the world.Every stitch made will talk about how knitting has influenced people.I have done some and would like to share it with you. Some patterns have been taken from free knitting sites. Some designs have been created by me. Many a times I have modified the patterns to suite my requirements. Finally I can say that I breathe knitting, I talk knitting, I walk knitting - a total knitaholic

Thank You

Thanks for visiting my blog. Your appreciations are most welcome

My sweet buddies

Tuesday, December 17, 2019

lallesvari - penn sidar



penn sidar - llaesvari
நம் பாரத நாட்டில் பண்டைய காலத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை மத வேறுபாடுகள்.
பதிவு: நவம்பர் 26, 2019 17:02 PM
நம் பாரத நாட்டில் பண்டைய காலத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை மத வேறுபாடுகள். இதைக் கையில் எடுத்துக்கொண்டு பல மனிதர்களும் மதம் பிடித்து அலைகிறார்கள்.
ஆனால் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண்மணி மத சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுத்திருக் கிறார். அதை வளர்க்கப் பாடுபட்டிருக்கிறார்.
யார் அந்த அம்மையார்?
1320-ம் வருடம் காஷ்மீரத்தில் பாண்டிர்தன் கிராமத்தில் பிறந்து,1392-ம் வருடம் வரை வாழ்ந்து மறைந்தவர், லல்லேஸ்வரி அன்னை. ‘லல்லா’, ‘லால் டெட்’ (grand mother), ‘லால் டிட்டி’ என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டவர் இவர். மிகவும் பழமையான காஷ்மீர் பண்டிட் குடும்பத்தில் பிறந்த இவரின் அறிவு, சிறுவயது முதலே சுடர் விட்டு எரிந்தது.
தன்னுடைய வீட்டிலேயே இருந்தபடி கல்வி பயின்றார். அவரது குருவாக இருந்து கல்வி பயிற்று வைத்தவர் சித் ஸ்ரீகாந்த் என்பவர். லல்லேஸ்வரியின் ஆன்மிக தாகத்தைப் புரிந்து கொண்டு, சைவ சம்பிரதாயங்களில் ஆர்வத்தைத் தூண்டியவர் இவர்தான்.
குருவின் மூலம் கற்ற அறிவைக் கொண்டு, அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே சிவபெருமான் மீது பல பாடல்களை எழுதி பாடத் தொடங்கினார். ஆனால் அவரது ஆன்மிகப் பணிக்கு, அந்த காலகட்டத்தில் பெண்பிள்ளைகள் அடிமைப்பட காரணமாக இருந்த குழந்தைத் திருமணம் மூலமாக முட்டுக்கட்டை உருவானது.
பெற்றவர்கள், தங்களின் பாரத்தை இறக்கும் நோக்கத்தில், லல்லேஸ்வரிக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இறைபணியில் மனம் மூழ்கி இருந்தாலும், பெற்றோர் மனம் வாடக் கூடாதே என்று மறுப்பு ஏதும் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் ஒரு பெண், ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு கொண்டு பாடல்கள் பாடுவதையும் எழுதுவதையும் லல்லேஸ்வரியின் கணவனும், மாமியாரும் ஏற்றுக்கொள்ள வில்லை. லல்லேஸ்வரியின் பெயர் பண்டிட் வழக்கப்படி `பத்மாவதி' என்று மாற்றப்பட்டது.
“பத்மா.. பத்மாக்கண்ணு.. வாடா வந்து சாப்பிடு” என்றார் மாமியார்.
அதிகாலையில் எழுந்தது முதல் வீட்டு வேலைகள் முழுவதையும் முடித்து விட்டு வந்தவரை, மாமியார் அன்போடு அழைத்ததும், அவரது வேலைக்களைப்பு முழுவதும் நீங்கி விட்ட உணர்வு ஏற்பட்டது. கவலைகள் அனைத்தும் மறந்து போக ஆவலுடன் சாப்பிடும் இடத்திற்குப் போனாள், அந்தக் குழந்தைத் தன்மை மாறாத குட்டி புதுமணப் பெண்.
சாப்பாட்டு தட்டு நிறைய சாதமும், அதன் மேல் பருப்பு சாம்பாரும் ஊற்றப்பட்டிருந்தது. ஆவலுடன் சாப்பாட்டைப் பிசைந்த அந்தப் பிஞ்சு மனம், கொஞ்சம் அதிர்ந்துதான் போனது. ஏனெனில் மேல்புறம் சாப்பாடு தூவப்பட்டு, அதன் கீழே கற்கள் வைக்கப்பட்டிருந்தன.
“அந்த சாப்பாட்டை எப்படி சாப்பிடுவது?”
மாமியார் முகத்தைப் பார்த்தார். அதுவரை அந்த முகத்தில் இருந்த காருண்யம் மறைந்து, குரூரம் குடி கொண்டிருந்தது. அதைப் பார்த்த பத்மாவதி என்றழைக்கப்பட்ட லல்லேஸ்வரியின் மனதில் சிவன் தோன்றினார். மனதிற்குள்ளேயே சிவபெருமானை போற்றித் துதித்தவர், எந்த வார்த்தையும் பேசாமல் அங்கிருந்து அகன்று சென்று விட்டார்.
மற்றுமொரு நாள் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பிக் கொண்டிருந்தார் பத்மாவதி.
அப்போது “அடியே பத்மா.. இவ்வளவு நேரமா தண்ணீர் கொண்டுவருவதற்கு? அங்கே யாரைப் பார்த்து நின்று கொண்டிருந்தாய்?” என்று கீழ்த்தரமாக பேசினார், அவரது மாமியார்.
அவளது கணவனும் கூட தன் தாயின் பேச்சை நம்பி, பத்மாவை பின் தொடர்ந்தான். ஒரு திருப்பத்தில் எதிர்பாராத விதமாக மனைவியின் மீதே மோதிக் கொண்டான்.
அதில் தண்ணீர் எடுத்து வந்த பானை கீழே விழுந்து துண்டு துண்டாக உடைந்தது. ஆனால் கீழே கிடந்த எல்லாத் துண்டுகளிலும் தண்ணீர் அப்படியே இருந்தது. அந்தத் துண்டுகளில் இருந்த தண்ணீரையே வீட்டின் பாத்திரங்களில் எல்லாம் ஊற்றினார். அந்த தண்ணீரே, அனைத்துப் பாத்திரத்திலும் நீர் நிரப்பும் அளவுக்கு வந்துகொண்டே இருந்தது. இன்னும் மீதம் தண்ணீர் இருந்தது.
“வேறு எந்தப் பாத்திரத்திலாவது ஊற்ற வேண்டுமா அத்தை?” என்று கேட்டாள், லல்லேஸ்வரி.
பன்னிரண்டு ஆண்டுகள் இதே போன்று பல வகைகளிலும் கொடுமைகளை அனுபவித்து வந்த லல்லேஸ்வரி, அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.
சிவனைத் தேடி, உண்மையைத் தேடி அலைந்தார். வழியில் அவருக்கு ஒரு குரு கிடைத்தார். யோகம் கை வந்தது. மீண்டும் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினார். ஆடைகள் கந்தலாகின. ஆனால் பல வருடங்களாக வாரப்படாமல் அடர்த்தியாக, கால் வரை வளர்ந்திருந்த கூந்தலே அவருக்கு ஆடையாக மாறிப்போனது.
எதைப்பற்றியும் அவர் கவலை கொள்ளவில்லை. உடலை மூடியிருந்த அந்த ரோமங்களோடு பார்க்கும் போது, அவர் பைராகி அல்லது பைரவி போன்ற தோற்றத்தில் காணப்பட்டார்.
அவரின் உரைகள், ‘வாக்குகள்’ என்று புகழப்பட்டன. இந்துக்கள் இவரை ‘லல்லீஸ்வரி’ என்றும், இஸ்லாமியர்கள் ‘லால் அரிபா’ என்றும் அழைத்தனர். பலருக்கும் இவர் ‘லால் அன்னை.’
“இந்த உலகின் ஒவ்வொரு துகளிலும் இறைவன் இருக்கிறான். இந்து - முஸ்லிம் என்ற பாகுபாடு எதுவும் இல்லை. முதலில் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். பிறகு இறைவனுடனான தொடர்பை அறிந்து கொள்ளுங்கள்” என்பது அவரது அறிவுரையாக இருந்தது.
இந்துக்களும், இஸ்லாமியர்களும் அவரைக் கொண்டாடினர். ஒவ்வொரு காஷ்மீரியும் அவர் புகழ்பாடினர். அவரைக் குறித்து பெருமைப் பட்டார்கள்.
தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை மத ஒற்றுமை, சகிப்புத்தன்மை, மனித நேயம் இவற்றை வலியுறுத்தி பல பாடல்களை எழுதிப் பாடினார் லால் அன்னை.
தனது வாழ்க்கையின் இறுதியில் தீ வளர்த்து அதில் இறங்கினார். அந்தப் பிறைசூடனின் தலையில் சூடிய மூன்றாம் பிறை போல், குளிர்ச்சியுடன் அவரை அணைத்தது நெருப்பின் நாக்குகள்.
நம் பாரத பூமிதான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறது. நாம் தாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறோம், இப்பூமியில் பிறக்க.
எத்தனையோ மகான்களும், யோகினிகளும் வாழ்வின் சுகங்களை அனுபவிக்காமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்து போயிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அன்னையரில் முதன்மையானவரான லல்லேஸ்வரி என்னும் லால் அன்னையின் பாதங்களை மானசீகமாக பணிவோம்.
source-dina thandi

radha krishnamayee- penn sidhar



ராதா கிருஷ்ணமாயி
அக்கா.. இந்த சுந்தரியைப் பார்த்தீங்களா? ஒரு பொண்ணுக்கு அடக்கம் ஒடுக்கம் வேண்டாமா? என்னமோ நேத்துத்தான் கல்யாணமான மாதிரி, எப்போது பார்த்தாலும் சிரிப்பும், குதூகலமும்? ச்சே.. ச்சே..” என்றாள் ஒருத்தி.
பதிவு: டிசம்பர் 10, 2019 20:44 PM
“ஏன்க்கா.. நம்ம வீட்லதான் பொழுது போயி பொழுது வந்தா, சண்டையும், சச்சரவுமாவே கெடக்கு. அவளாவது புருஷனோட சந்தோஷமா இருக்கட்டுமே” என்றாள் மற்றொருத்தி.
இந்தப் பெண்களின் வம்பு ராஜ்ஜியம் தடங்கல் இல்லாமல் நடந்த இடம், அஹமத் நகரின் பொதுவான நல்ல தண்ணீர் கிணறு.
அவர்கள் பேசிக்கொண்டிருந்தது அந்த ஊரில் தன் கணவருடன் சந்தோஷமாக, பிறர் பார்த்து பொறாமைப்படும்படி வாழ்ந்துவந்த சுந்தரிபாய் பற்றி.
ஆண்டுகள் பல கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாவிட்டாலும், அது தனக்கு மன வேதனையைத் தந்தாலும், கணவரின் முகம் வாடக்கூடாது என்பதற்காக எப்போதும் மகிழ்ச்சியாகவே வலம் வந்தாள், சுந்தரிபாய்.
ஆனால் ஊர் கண் பட்டதோ அல்லது விதியின் விளையாட்டோ, திடீரென சுந்தரியின் கணவர் நோய் வாய்ப்பட்டார். செல்லாத கோவில்கள் இல்லை.. வேண்டாத தெய்வங்கள் இல்லை.. காண்பிக்காத மருத்துவர்களும் இல்லை.
கடைசியாக சீரடியில் இருக்கும் பாபா, கண் பார்வையாலும், ‘உதி’யாலும் நோய்களை குணப்படுத்துவதாகக் கேள்விப்பட்டு சீரடிக்கு வந்து பாபாவின் கால்களில் விழுந்தாள்.
பாபா அவளை அன்போடு நோக்கி, “தைரியமாக இரு.. எந்த நிலையிலும் திடமாக இரு. விரைவில் தாயாகும் பாக்கியம் பெறுவாய்” என்று ஆசீர்வாதம் செய்தார்.
ஆனால் ஊர் திரும்பிய கொஞ்ச நாட்களிலேயே அவளது கணவரின் உடல்நலம் மேலும் மோசமானது. எந்த மருந்தும் பயனளிக்காமல் அவளது கணவர் இறந்து போனார்.
அழுது புலம்பிய சுந்தரிபாய், கண்ணீருடன் தலைவிரிக்கோலமாக பாபா முன் வந்து நின்றாள்.
“ஏன் என்னைச் சோதித்தீர்கள். உங்களையே முழு மனதாக நம்பி வந்த என்னை ஏன் கை விட்டீர்கள்?” என்று கதறினாள்.
பாபா அவளை அன்புடன் நோக்கி, “கலங்காதே அம்மா.. எது செய்தாலும் விதியை வெல்ல முடியாது. நடப்பது நடந்தே தீரும்” என்றார்.
பாபாவின் அந்த வார்த்தைக்கு சமாதானம் ஆகாத சுந்தரி, “ஏன் பொய் சொன்னீர்கள்? நீ கூடிய விரைவில் தாயாவாய் என்று வாக்களித்தீர்களே” என்று கதறினாள்.
அவளது வார்த்தையும் வருத்தமும், கேபமும் தென்பட்டாலும், பாபாவின் கண்களில் எப்போதும் போல அன்பே வெளிப்பட்டது. அவர் சுந்தரியைப் பார்த்து, “எனது வாக்கு எப்போதும் பொய்ப்பதில்லை. இந்த துவாரகாமாயில் இருந்து நான் கூறும் சொற்கள் உண்மையானவை. நீ கருவுற்று பிள்ளை பெற்றிருந்தால் ஒரு குழந்தைக்கு மட்டுமே தாயாகி இருப்பாய். இப்போதோ எனக்கும், இந்தத் துவாரகாமாயிக்கு வரும் அத்தனை பக்தர்களுக்கும் நீயே தாய்” என்றார்.
அதோடு நில்லாமல் அங்கே குழுமியிருந்த அனைவரையும் பார்த்து, “அன்புள்ளவர்களே.. தாயாக இருப்பதற்கு வயது தேவையில்லை. இன்று முதல் நம் அனைவரின் தாய் இவள். இன்றிலிருந்து இவள் ‘ராதா கிருஷ்ணமாயி’ என்று அழைக்கப்படுவாள்” என்று கூறவே அங்கிருந்த அனைவரும், “ராதாகிருஷ்ணமாயி அன்னை வாழ்க.. வாழ்க..” என்று குரலெழுப்பினர்.
ராதா கிருஷ்ணமாயி, தனக்கு உயர்ந்த வாழ்வளித்த பாபாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி கண்ணீர் விட்டாள்.
அன்றில் இருந்து சீரடி மக்களுக்கும், பாபாவிற்கும் மட்டும் அல்ல.. சீரடிக்கு வரும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உணவளிக்கும் அன்னபூரணியானார்.
அவரின் இருப்பிடத்தில் இருந்து பெருமளவு உணவும், இனிப்புப் பண்டங்களும் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
சாய்பாபாவிற்கு மிகவும் பிடித்தமானது அன்னதானம். துவாரகாமாயின் உணவு சமைக்கும் பொறுப்பு ராதா கிருஷ்ணமாயிடம் ஒப்படைக்கப்பட்டது. பாபாவின் கருணையால் எவ்வளவு நபர்கள் வந்தாலும், இல்லையென்று சொல்லாமல் உணவு பரிமாற அவரால் முடிந்தது.
அது மட்டுமல்ல 1909-ம் வருடத்தில் இருந்து சாய் மசூதியிலும், சாவடியிலும் தங்க ஆரம்பித்தார். அந்த சமயங்களில் எல்லாம் மசூதியின் சுவர்களையும், தரையையும் கழுவிச் சுத்தம் செய்வார். இந்தப் பணியை நேர்த்தியாக தூய்மையாக விருப்பத்தோடு செய்வார்.
சந்தனக்கூடு, ராம நவமி இரண்டும் ஒன்றாகவே சீரடியில் கொண்டாடப் பெற்றது. விழாப் பொறுப்புகள் அனைத்தும் ராதா கிருஷ்ணமாயிடமே வழங்கப்பெற்றது. நாம சங்கீர்த்தனங்களும் நடைபெற்றன.
கிருஷ்ணன் தொட்டிலில் ஆடிய நினைவாக, தொட்டில் ஒன்றை நடுநாயகமாக வைத்து இஞ்சியும், சர்க்கரையும் கலந்த பொடியை அனைவருக்கும் பிரசாதமாக விநியோகித்தார்.
ஒரு சித்திரை முதல் தேதியில் இருந்து இறைவன் புகழை இடைவிடாமல் ஏழு நாட்களுக்குப் பாடும் ‘நாம சப்தாஹம்’ என்ற கீர்த்தனையை ராதா கிருஷ்ணமாயி ஆரம்பித்தார். முதலில் ஏழு நாட்கள் ஆரம்பித்து, பின் தினமும் பாடப்பெற்றது.
இது தவிர பாபா பாடிய பாடல்களையும், பிற பாடகர்கள் பாடிய பாடல்களையும் ஒருங்கிணைத்து, ஆரத்தி பாடல்களாக தினமும் காலை மாலை வேளைகளில் பக்தர்களைப் பாடச் செய்தார், ராதா கிருஷ்ணமாயி.
பாபா, இந்த அன்னையிடம் எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பதை விளக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. ஒரு சமயம் திடீரென ராதாகிருஷ்ணமாயி தங்கியிருந்த குடிலின் கூரை மீது ஏறி இறங்கினார், பாபா.
அங்கிருந்த மக்கள், ‘பாபா ஏன் அவ்விதம் செய்தார்’ என்று நினைத்துக் கொண்டிருக்கையில், “என் அன்னை விஷக் காய்ச்சலால் துன்பப்படுகிறாள். அதைக் குணப்படுத்தவே கூரை மீது ஏறி இறங்கினேன்” என்று விளக்கமளித்தார்.
பாபாவின் இந்த விசித்திரமான செய்கை, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அன்னை உடனே குணமாகினார். அவ்வளவு கடுமையான காய்ச்சல் எப்படித் திடீரென குணமானது என்று ஆச்சரியத்துடன் வெளியே வந்த ராதா கிருஷ்ணமாயி, அங்கே பாபாவைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டார். பாபாவின் கருணையை எண்ணி, அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது. கைகூப்பி பாபாவை வணங்கினார்.
சாதாரணமாக இருந்த சீரடி, சமஸ்தானமாக மாற ராதா கிருஷ்ணமாயின் உழைப்பே காரணம். பாபாவால் பெரிதும் நேசிக்கப்பட்டவர் மட்டும் அல்ல. பாபாவின் இறுதி வரை அவர் கூடவே இருக்கும் பாக்கியம் பெற்றவர். ஆனால் இவரின் பிறப்பு இறப்பு முதலான விவரங்கள் சாய் சரிதத்திலோ, இன்ன பிற நூல்களிலோ காணப்படவில்லை.
அதனால் என்ன? இந்தப் பூவுலகில் எங்கெல்லாம் மனிதர்களின் பசி தணிக்க ஒரு கவளம் உணவாவது தானமாக தரப்படுகிறதோ, எங்கெல்லாம் அன்னதானம் போடுகிறார்களோ, அங்கெல்லாம் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் ராதா கிருஷ்ணமாயி ‘அன்னதான மாயி’யாக அருள்பாலிக்கிறார்.
அதுமட்டுமல்ல எங்கெல்லாம் பாபாவின் ஆரத்திப் பாடல்கள் பாடப் பெறுகின்றனவோ, அவரின் புகழ் பேசப்படுகிறதோ அங்கு நிறைந்திருக்கும் காற்றில் ராதாகிருஷ்ணமாயி வாசம் செய்கிறார்.
நம் வீட்டில் சோறு சமைக்கும் போதும், அதைச் சாப்பிடும்போதும் ஒரு நிமிடமாவது அன்னபூரணியாக விளங்கிய ராதாகிருஷ்ணமாயி அன்னையை நினைத்து வணங்குவோம்.
sourse: dina thandi

Thursday, November 14, 2019

Vishnu sahasranam associated prayers

விஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் வரும்
சில வார்த்தைகள்
முடிந்த போதெல்லாம் கூறுங்கள் நன்மை அடையுங்கள்
ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள் (விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்)
#2படிப்பில் வல்லவனாக:-
வேதோ வேதவிதவ்யங்கோ
வேதாங்கோ வேதவித் கவி:
#வயிற்றுவலி நீங்க:-
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா
ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:
#உற்சாகம் ஏற்பட:-
அதீந்த்ரியோ மஹாமாயோ
மஹோத்ஸாஹோ மஹாபல:
#ஸூக்ஷ்மபுத்தி ஏற்பட:-
மஹா புத்திர் மகாவீர்யோ
மகாசக்திர் மஹாத்யுதி:
#கண்பார்வைதெளிவு பெற
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா
ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்
#பெருமதிப்பு ஏற்பட :-
ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர்
ஜஹ்நுர் நாராயணோநர:
#எண்ணியகாரியம் நிறைவேற :-
ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதன:
#கல்யாணம் நடக்க :-
காமஹா காமக்ருத் காந்த:
காம: காமப்ரத: ப்ரபு:
#உயர்ந்தபதவி ஏற்பட :-
வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந:
ஸம்ஸ்த்தாந: ஸ்தாநதோ த்ருவ:
#மரணபயம் நீங்க :-
வைகுண்ட: புருஷ: ப்ராண:
ப்ராணத: ப்ரணவ: ப்ருது:
#அழியாச்செல்வம் ஏற்பட :-
அர்த்தோநர்த்தோ மஹாகோசோ
மஹாபோகோ மஹாதந:
#நல்லபுத்தி ஏற்பட :-
ஸர்வதர்சீ விமுக்தாத்மா
ஸர்வஜ்ஞோ ஜ்ஞான முத்தமம்
#சுகம் உண்டாக :-
ஆநந்தோ நந்தநோ நந்த:
ஸத்யதர்மா த்ரிவிக்ரம:
#க்ஷேமம் உண்டாக :-
அனிவர்த்தி நிவ்ருத்தாத்மா
ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ:
#துன்பங்கள் தொலைய :-
பூசயோ பூஷணோ பூதிர்
விசோக: சோகநாசன:
#வியாதிகள் நீங்க :-
பூர்ண: பூரயிதா புண்ய:
புண்யகீர்த்தி ரநாமய:
மோக்ஷமடைய :-
சத்கதி: சத்க்ருதி: ஸத்தா
ஸத்பூதி: ஸத்பராயண:
#சத்ருவை ஜெயிக்க :-
ஸுலப: ஸுவ்ருத: ஸித்த:
சத்ருஜிச் சத்ருதாபன:
ஆபத்து விலக :-
அமூர்த்திரநகோ சிந்த்யோ
பயக்ருத் பயநாசந:
#மங்களம் பெருக :-
ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி
ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண:
துர்சொப்பனம் நீங்க :
உத்தாரணோதுஷ்க்ருதிஹா
புண்யோ துஸ்ஸ்வப்நநாசந:
#பாபங்நீங்க :-
தேவகீ நந்தந: ஸ்ரஷ்டா
க்ஷிதீச: பாபநாசந:
தன்யோஸ்மி..... 🙏

Wednesday, October 30, 2019

Features of the puranas


Features of the puranas

Scholars believe that the number of Mahapuranas of Vedic and Vaidic characters as eighteen
Its antiquity is not mentioned as its formation and flowering is independent tradition of
Puranic literature. Itihasa, Sruti and Smrti are part of the text. The teacher and student
together bring  the subject , object and instrument. The period of the puranas can be gauged
with reference to the text which it belonged and then the period. It was the seers who gave
us this priceless gift to us. We should also salute the torch bearers who have made these
 texts more appealing to the common man.

Features of the puranas

Following are the main features of the puranas
1.Creation
2.The intermediate creation
3.Dynasties of the gods and the patriarchs
4.The fourteen manus and their periods
5.Genealogy of the kings of the Solar and Lunar dynasty
6.Protection of the world by incarnations
7.Dissolution of the world
8.The cause of creation viz the Jiva and its Karmas
9.Modes of subsistence
10.The refuge- The Brahman


source: know the puranas – pustak mahal



Tuesday, September 24, 2019

Madhu and kaitabha get destroyed


Madhu and Kaitabha get destroyed

Two demons called Madhu and kaitabha were born from the ears of Maha Vishnu, when
he was fast asleep one day, on the milky ocean.

Because of their high-class birth from the Lord, they were arrogant and atrocious in their
behaviour towards fellow creatures. They disturbed the sages in their meditations,
attacked the devas and travelled everywhere troubling everyone.

When devas went to Brahma for help, he prayed to Lord Vinayaka and became
invisible. Next devas complained to Lord Vishnu so that he can put an end  to
Madhu and Kaitabha.

When Maha Vishnu confronted Madhu and kaitabha, a fierce battle of dreadful
weapons ensued. Boxing with muscle power and all other types of wars also proved
futile. Finally Maha Vishnu made the demon go blind by his magic and went to
Lord Shiva for a solution.

Lord Shiva advised Maha Vishnu to pray to Lord Vinayaka, as Vishnu had failed to so
at the beginning .Lord Vinayaka was the only one who can ward off the evils that crop
up during the battle and give Vishnu the super-power to win over the enemies.

Vishnu followed Lord Shiva’s advice and then met the demons in a fierce fight.
His bow sarangam and Arrows did not yield the desired results.
As a last resort, Vishnu prayed to Lord Vinayaka once again and hurled his
Chakrayudha, at the enemies.

Madhu-Kaitabha fell a prey to Vishnu’s chakrayudha at last. Devas greeted
 Maha Vishnu and Brahma also came out of his hiding to congratulate Lord
Vishnu on his great victory.

Sourse:Dr.Akila Sivaraman.

Saturday, September 21, 2019

Lord Vinayaka gets married


Lord Vinayaka gets married
The two daughters of Lord Brahma – Siddhi and Buddhi – had grown into beautiful maidens
and Lord Vinayaka was the chosen bridegroom for them. Having learnt about this desire
of Lord Brahma , sage Narada went to Kailas. He met Lord Vinayaka there and placed
the marriage proposal before him. Lord Vinayaka was kind enough to give his consent for
the marriage and as the next step, Naradha apprised Brahma of Ganesha’s approval.
Lord Brahma immediately went to Mount Kailas and met the divine parents of the groom –
Lord Shiva and Goddess Parvati. When they also agreed to the proposal and gave their
blessings, Brahma met Vinayaka and formally placed his desire of a grand weddings of his
daughters with him.

Lord Vinayaka agreed readily and Brahma went to Vaikuntha and informed Lord Vishnu and his consort Goddess Lakshmi also.

Devas, Siddhas, Vidyadharas, the guardians of the four directions and all the celestial beings
went to look after the arrangements for the weddings of the Supreme Lord. The chief architect
 Viswakarma took charge of the festivities. Tasteful decorations followed all over the globe.
Kamadhenu , Karpagavruksha , all the dancing girls and every creature on Earth partook
in the grandeur and gaiety all round.

Lord Shiva and Devi Parvati started with their son Vinayaka from Kailas .Nandideva, the
twelve Suns, eleven Rudras and many others accompanied the bridegroom. Maha Vishnu
and Brahma received all the guests and ushered them into marriage hall ceremoniously.

Indrani, Anusuya and others helped Siddhi and Buddhi to get ready for the happy
occasion. Vidhyadhara provided music and there was chanting of mantras and showering
of flowers all over the place.

Lord Brahma and Goddess Saraswati gave their lovely daughters in marriage to Lord Ganesha,
with all the sacred rituals performed as per Vedas.

All the guests at the function raised hectic cheers all round and took the holy blessings of
Lord Vinayaka and his consorts-Siddhi and Buddhi . The splendid darshan of the Lord Supreme
with his consorts stayed in the mind of all devotees who graced the function.

source: Dr.Akila Sivaraman

Wednesday, August 7, 2019



அத்தி மரத்தால் ஆன தெய்வச் சிலைகள் - others GODS made from athi maram

* திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படவேடு ரேணுகாம்பாள் அம்மன் முழு உருவச்சிலை அத்தி மரத்தால் ஆனது.
பதிவு: ஆகஸ்ட் 06, 2019 16:36 PM
* உடுப்பி கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டது.
* புதுவைக்கு அடுத்த வீராம்பட்டினம் என்ற மீனவ கிராமத்தில் கடலில் மிதந்து வந்த அத்தி மரத்தை செங்கேணி அம்மன் சிலையாக வடித்து வழிபடுகிறார்கள். இவ்வூரில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா பிரெஞ்சு காலத்தில் இருந்து புகழ் பெற்றது.
* திருமலையில் (திருப்பதி) தல தீர்த்தமாகிய குளத்திலும் அத்தி வரதர் எழுந்தருளிஉள்ளார்.
* வானமுட்டிப் பெருமாள் ஆலயம், மயிலாடுதுறை அருகே சுமார் 5 கி.மீ. தூரத்தில் கோழிகுத்தி என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மூலவர் அத்தி மரத்தைக் கொண்டு 15 அடி உயரத்தில் சிலையாக வடிக்கப்பட்டுள்ளார். சங்கு, சக்கரம், கதை, அபயசீதம் ஏந்தி, மார்பில் மகாலட்சுமி விளங்க சேவை சாதிக்கிறார். பெருமாள் விஸ்வரூபமாக இருந்ததால் ‘வானமுட்டிப் பெருமாள்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாம். இக்கிராமத்தின் இயற்பெயர் ‘பாப விமோசனபுரம்’ என்பதாகும்.
* அத்தி, ஆறாவது கிரகமான சுக்ரனின் அம்சமாகக் கருதப்படுகிறது. வேலூரை அடுத்த பொன்னை, விநாயகபுரத்தில் நவக்கிரகங்களுக்கு ஒன்பது வகையான கோவில்கள் கட்டப்பட்டு உள்ளன. இது ஸ்ரீ நவக்கிரக கோட்டை ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சுக்ரனை வணங்குவதற்காக அத்தி மரமும் நடப்பட்டுள்ளது. அசுர குரு சுக்ராச்சாரியார் அத்தி மரமாக மறுபிறவி எடுத்ததாக சதுர்மாசிய மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.
* நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்த பின்பு, பெருமாள் அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டாராம்.
* மும்மூர்த்திகளின் ஒரே வடிவமாக பார்க்கப்படும் தத்தாத்ரேயர், அத்தி மரத்திலே வாசம் செய்வதாக குரு சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
* கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடு இன்றி வாழவும், கடைசி வரை பிரியாமல் இருப்பதற்கும், வீட்டில் அத்தி மரம் நட்டு வைத்து பராமரித்து வருவது நல்லது என்பது ஐதீகம்.
* அத்திக்கு நல்ல அதிர்வலைகள் உண்டு. எனவே அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தவம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல், எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமோ, அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும்.
source - dinathanthi dt 6.8.2019

Friday, July 5, 2019

sanskrit names for the items used in puja

பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய பொருள்களின் சமஸ்க்ருத பெயர்கள் :
1) வெற்றிலைப் பாக்கு - தாம்பூலம்
2) முழுத்தேங்காய் - நாரிகேலம்
3) பல தேங்காய் மூடிகள் - நாரிகேல கண்டாணீ
4) வாழைப்பழம் - கதலி பலம்
5) மாம்பழம் - ஆம்ர பலம்
6) விளாம்பழம் - கபித்த பலம்
7)நாகப்பழம் ( நாவல்பழம் ) - ஜம்பு பலம்
8) பலாப்பழம் - பனஸ பலம்
9) சாத்துக்குடி - நாரங்க பலம்
10) ஆப்பிள் பழம் - காஷ்மீர பலம்
11) பேரிக்காய் - பேரீ பலம்
12) கொய்யாப் பழம் - பீஜா பலம்
13) திராட்சை பழம் - திராட்ஷா பலம்
14) பேரீச்சம் பழம் - கர்ஜீர பலம்
15) பிரப்பம் பழம் - வேத்ர பலம்
16) கரும்பு - இக்ஷூ தண்டம்
17) மாதுளம்பழம் - தாடிமீ பலம்
18) எலுமிச்சம்பழம் - ஜம்பீர பலம்
19) வடை - மாஷாபூபம்
20) மஞ்சள் பொங்கல் - ஹரித்ரான்னம்
21) எள்ளுச்சாதம் - திலோன்னம்
22) சர்க்கரைப் பொங்கல் - குடான்னம்
23) அக்காரவடிசல் - சர்க்கரான்னம்
24) வெண்பொங்கல் - முத்கான்னம்
25) புளியோதரை - திந்திரிணியன்னம்
26) வெள்ளைசாதம் - சுத்தான்னம்
27) எலுமிச்சைசாதம் - ஜம்பீரபலன்னம்
28) தேங்காய் சாதம் - நாரிகேலன்னம்
29) தயிர்சாதம் - தத்யோன்னம்
30) பலவித சாதங்கள் - சித்ரான்னம்
31) சுண்டல் - க்ஷணகம்
32) பால் பாயாசம் - க்ஷீர பாயஸம்
33) வெல்ல பாயாசம் - குட பாயஸம்
34) புட்டு - குடமிச்சபிஷ்டம்
35) முறுக்கு - சஷ்குலி
36) இட்லி - லட்டுகானி
37) கொழுக்கட்டை - மோதகானி
38) அப்பம் - குடாபூபம்
39) மாவிளக்கு - குடமிஸ்ஸபிஷ்டம்
40) அதிரசம் - குடாபூபம்
41) உளுந்து - மாஷம்
42) பயறு - முத்கம்
43) எள் - திலம்
44) கடலை - க்ஷணகம்
45) கோதுமை - கோதுமா
46) அரிசி - தண்டுலம்
47) அவல் - ப்ருதுகம்
48) நெய் - ஆஜ்யம்
49) பருப்பு பாயாசம் - குடபாயஸம்
50) பால் - க்ஷீரம்
51) சுக்கு வெல்லம் கலந்த நீர் - பானகம்
52) வெண்ணெய் - நவநீதம்
53) கல்கண்டு - ரஸ கண்டாளீ
56) மல்லிகைப்பூ - மல்லிகாபுஷ்பம்
57) செவ்வந்திப்பூ - ஜவந்திபுஷ்பம்
58) தாமரைப்பூ - பத்மபுஷ்பம்
59) அருகம்புல் - தூர்வாயுக்மம்
60) வன்னிஇலை - வன்னிபத்ரம்
61) வில்வ இலை - பில்வபத்ரம்
62) துளசி இலை - துளஸிபத்ரம்
63) ஊதுபத்தி / சாம்பிராணி - தூபம்
64) விளக்கு - தீபம்
65) சூடம் - கற்பூரம்
66) மனைப்பலகை - ஆசனம்
67) ரவிக்கைத்துணி - வஸ்த்ரம்
68) மஞ்சள்/குங்குமம் கலந்த அரிசி - மங்களாட்சதை
69) ஜலம் நிரப்பிய சொம்பு - கலசம்
70) திருமாங்கல்ய சரடு - மங்கலசூத்ரம்
71) மற்ற பட்சணங்கள் - விசேஷபக்ஷணம்
72) பூநூல் - யக்ஞோபவீதம்
73) சந்தணம் - களபம்
74) விபூதி - பஸ்பம்
75) வாசனை திரவியங்கள் - ஸுகந்தத்ரவ்யா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...